ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நிபா வைரஸ் தாக்கம்: அச்சத்தால் விடுமுறை கேட்கும் அரசு ஊழியர்கள்

நிபா வைரஸ் தாக்கிய இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்ததை அடுத்து பலாசேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் விடுமுறை கேட்டுள்ளனர்.

News image
Updated On :1 ஜூன் 2018, 9:39 am


கோழிக்கோடு: நிபா வைரஸ் தாக்கிய இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்ததை அடுத்து பலாசேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் விடுமுறை கேட்டுள்ளனர்.

கேரளாவில் வட மாவட்டங்களைத் தாக்கிய நிபா வைரஸ் காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், தாலுகா அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் நேற்று மரணம் அடைந்ததை அடுத்து, தங்களுக்கும் அந்த நோய் தாக்குமோ என்ற அச்சத்தில், விடுமுறையில் செல்ல அனுமதிக்குமாறு மருத்துவர்களும், செவிலியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஏராளமான அரசு அலுவலகங்களையும், தாற்காலிகமாக மூடி வைக்க அனுமதிக்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுகின்றனர். உதாரணமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களை சில நாட்களுக்கு மூடி வைக்க அனுமதிக்கும்படி ஊழியர்கள் கோரியுள்ளனர்.

நிபா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நீதிமன்றங்களை மூடி வைக்க அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.