2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிரதமர் என்பதையே நரேந்திர மோடி மறந்துவிட்டார்: ராகுல் பதிலடி

நரேந்திர மோடி தான் ஒரு பிரதமர் என்பதையே மறந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பதிலடி அளித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:11 pm

Raghavendran

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான காரணம். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டினை பிளவுபடுத்திவிட்டது என்று கடுமையாக விமரிசித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:

இந்தியாவுக்கு தற்போது தான் பிரதமர் என்பதையே நரேந்திர மோடி மறந்துவிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி வருகிறார்.

சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் பேசிய மோடி, அதில் விவசாயம், ரஃபேல் ஒப்பந்தம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி, ஆந்திர மாநிலத்தின் நிலை உள்ளிட்டவைகளை குறிப்பிடவில்லை. மாறாக இது முழுவதும் அரசியல் ரீதியிலான பேச்சாகவே அமைந்துள்ளது.

நாங்கள் அனைவரும் இவ்விவகாரங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் உரையினை ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் பிரசார மேடைகளில் பேசுவது போன்று தனது நாடாளுமன்ற உரையை முன்வைத்தார். அவரின் மொத்த கவனமும் காங்கிரஸ் கட்சியை விமரிசிப்பதில் மட்டுமே இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.