2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழகத்தில் எந்த எரிவாயு திட்டமும் நடைபெறவில்லை: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷெல் காஸ் உட்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:10 pm

Raghavendran

இரு நாட்கள் பொது விடுமுறைக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது. அப்போது எரிவாயு மீதான விவாதம் நடைபெற்றபோது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். 

அதில், தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷெல் காஸ் உள்ளிட்ட எந்த திட்டமும் நடைபெறவில்லை. கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் மீத்தேன், ஷெல் காஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை தொடங்க முடியும்.

அதுபோல கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைப்பை ஏற்படுத்த சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.