15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு

Updated On :16 நவம்பர் 2015, 2:12 pm

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், சில நாள்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சர்வதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா கொண்டுவரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், சோட்டாராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி முதல் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.  பத்து நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று அவரது காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.