ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

ANI

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், சில நாள்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சர்வதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா கொண்டுவரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், சோட்டாராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி முதல் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.  பத்து நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று அவரது காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.