மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து
சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸார் கூறினர்.
ஹைதராபாதை அடுத்துள்ள மேடக் மாவட்டம், எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகா சண்டி யாகம் கடந்த புதன்கிழமை (23ஆம் தேதி) தொடங்கி ஐந்து நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.
தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் யாகத்தின் இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் யாகம் நடைபெறும் பந்தலின் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
ஒமகுண்டத்திலிருந்து பரவிய தீ, யாகம் நடைபெற்ற பந்தலுக்குப் பரவியது. மூன்று தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தையடுத்து பந்தலில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எவருக்கும் காயமேற்படவில்லை. யாகம் நடைபெற்ற பந்தலின் ஒரு பகுதி சேதமடைந்தது என மேடாக் வட்டத்தின் டி.எஸ்.பி. ஜி.ராஜ் ரத்னம் கூறினார்.
இந்த தீவிபத்து காரணமாக, இன்று யாகத்தில் பங்கேற்பதாக இருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...