தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் "வை-ஃபை வசதி': சுந்தர் பிச்சை

இந்தியா முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என

News image
Updated On :16 டிசம்பர் 2015, 12:06 pm

கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் தொலைதொடர்பு பிரிவான ரயில்டெல் நிறுவனத்துடன் இன்று கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி இந்தியா முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் இணையதள சேவைக்கான வை-ஃபை வசதியை வழங்கும்.

இதன் பின்னர் நடைபெற்ற 'கூகுள் பார் இந்தியா' என்ற நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணைய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கூகுள் நிறுவன திட்டத்தின் கீழ் இந்த வசதி செய்துதரப்பட உள்ளது.

மும்பை ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வை-ஃபை வசதி கிடைக்கும். 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

அடுத்த ஆண்டு முதல் "டேப் டூ டிரான்ஸ்லேட்' என்ற புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்கவிருக்கிறது. இதன் மூலம் ஆன்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள எந்த வாக்கியத்தையும் மொழிப்பெயர்ப்பு செய்து காணலாம்.

மேலும், வானில் பறக்கவிடப்படும் பலூன் மூலம் வழங்கப்படும் இணைய தள சேவையான 'புராஜக்ட் லூன்'  திட்டமும் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளுக்கும், மலைவாழ் இடங்களுக்கும் இணையதள வசதி வழங்க முடியும் என்றார் சுந்தர் பிச்சை.

இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார். இதுதவிர, தில்லி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.