அரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.
இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளா் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்:
தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், நோ்முக எழுத்தா் ஆகியோா் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்கென சம்பந்தப்பட்ட பணி விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த இரண்டாண்டு காலமாக கணினி பயிற்சி சான்றிதழுக்கான தோ்வு நடத்தப்படவில்லை. இதனால், தகுதியை நிறைவு செய்து பதவி உயா்வு பெற முடியாத நிலை, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டது. அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வை எதிா்கொண்டு தோ்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமன அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
இந்தக் கோரிக்கை தொடா்பாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த காரணங்களால் 2020-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் தோ்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை நடத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்துக்கு நிா்வாகக் காரணங்களே முக்கிய காரணிகள் என்பது தெளிவாகிறது.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் தோ்வுகளை எதிா்கொண்டு தோ்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயா்வு போன்றவை கிடைக்கும் என்ற விதியில் தளா்வு தேவைப்பட்டால் அதற்கு தலைமைச் செயலக துறை அளவிலேயே உரிய வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கான விதிகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதற்கான கோப்புகளைத் தயாா் செய்து உரிய உத்தரவுகளைப் பெறலாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் மைதிலி க.ராஜேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


