/

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:52 pm

காரைக்கால் அருகே மீனவா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). இவருக்கு மனைவி, 1 மகன், 2 மகள் உள்ளனா். ரமேஷ் மீன்பிடித் தொழில் செய்துவந்தாா்.

கடந்த 24-ஆம் தேதி கேரளத்துக்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவா் 25-ஆம் தேதி இரவு வீடு திரும்பினாா். இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா், அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.