மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழகத்தில் வேலை 

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய விதை கழகத்தில் காலியாக உள்ள 259 மேலாண்மை 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

ஆர். வெங்கடேசன்

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய விதை கழகத்தில் காலியாக உள்ள 259 மேலாண்மை டிரெய்னி, மனிதவள மேலாண்மை, விவசாயம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். RECTT/1/18/NSC/2018

மொத்த காலியிடங்கள்: 259  

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee - 89
சம்பளம்: மாதம் ரூ.17,578

பணி: Senior Trainee - 78
சம்பளம்: மாதம் ரூ.22,748

பணி: Management Trainee -    58
சம்பளம்: மாதம் ரூ.41,360

பணி: Diploma Trainee - 12
சம்பளம்: மாதம் ரூ.22,748

பணி: Trainee Mate     - 21
சம்பளம்: மாதம் ரூ.17,061

தகுதி: விவசாயம், மேலாண்மை, சந்தையியல், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கான தகுதிகளையும் காண அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.525. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2018. எழுத்துத் தேர்வானது காலை மற்றும் மதியம் என இரு கட்டங்களாக நடைபெறும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf என்ற அதிகாப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.