இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ரயில்டெல் நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் வேலை

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:42 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.  RCIL/2017/P&A/44/25

மொத்த காலியிடங்கள்: 45

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineers - 38
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Sr. Manager - 07
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, டிகிரி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.