எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்


மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி தொழில்நுட்ப வல்லுநர் - 36
பணி: பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் - 03
பணி: வாகன ஓட்டுநர் - 44
பணி: தீயணைப்பு வீரர் - 15
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: உதவி தொழில்நுட்ப வல்லுநர், பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் ஆகிய பணிகளுக்குப் பொறியியலில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பிலும், வாகன ஓட்டுநர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300, இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.10.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...