டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வி பிரிவில் பணி

இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் 123-வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்பிரிவில் சேர திருமணமான, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:56 am

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் 123-வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்பிரிவில் சேர திருமணமான, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவு: Army Education Corps (AEC-123) (July 2016)

சம்பளம்: ஒரு வருட பயிற்சிக்கு பின்பு நிரந்தர பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,600 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 23 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தத்துவ இயல்,  உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Chinese, Tibetan, Burmese, Pushto, Dari & Arabic மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதுகலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Service Selection Board தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்.

தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.

நேர்முகத் தேர்வு: 2016 ஜனவரி மாதம் முதல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை இரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வரும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்றது மற்றும் அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.