மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தமிழ்நாடு

நாளை வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் நேரலை...

நாளை வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை

முன்னேற்பாடுகள் தீவிரம்..

Updated On :22 ஏப்ரல் 2026, 10:46 am
10:45 am, 22 ஏப்ரல் 2026

பூத் சிலிப் இல்லையா?

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கக் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

https://electoralsearch.eci.gov.in வலைதளத்தில் கேட்கப்பட்டுள்ள உள்ளீடுகளைப் பதிவிட்டு, வாக்காளர் தகவல் சீட்டை எளிதில் பெறலாம்.

10:35 am, 22 ஏப்ரல் 2026

நோட்டா பொத்தான் எங்கு உள்ளது?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் கடைசி விருப்பமாக உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

10:35 am, 22 ஏப்ரல் 2026

ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்களுக்கு தீர்வு: தேர்தல் ஆணையம்

மாநில ஊடகக் கட்டுப்பாட்டு அறையானது 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DROs) மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உள்பட 15 பேர் கொண்ட குழுவுடன் இயங்கி வருகிறது.

இந்தக் குழுவினர் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணித்து, தேர்தல் நடத்தை விதிகள் (MCC) மீறல், எதிர்மறையான அல்லது தவறான செய்திகள், வெறுப்புப் பேச்சு, கட்டணச் செய்திகள் (Paid News) மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் குறித்துக் கண்காணிக்கின்றனர்.

இன்று(ஏப். 22) வரை, 437 சமூக ஊடகப் புகார்கள், 129 அச்சு ஊடகப் புகார்கள் மற்றும் 100 மின்னணு ஊடகப் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.

10:24 am, 22 ஏப்ரல் 2026

முதல் முறை வாக்காளர்களா?

முதல் முறை வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் பூத் ஸ்லிப் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

10:23 am, 22 ஏப்ரல் 2026

வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க.. 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது. வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள் பற்றி..

5:18 am, 22 ஏப்ரல் 2026

நாளை வாக்குப்பதிவு: விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4,000 - ரூ. 5,000 வரை இருக்கும் நிலையில் தற்போது ரூ. 14,000 வரை உயர்ந்துள்ளது.

5:16 am, 22 ஏப்ரல் 2026

சென்னையில் இருந்து 1,88,705 பேர் பயணம்!

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் 1,88,705 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்.21) பயணம் செய்துள்ளனர்.

5:15 am, 22 ஏப்ரல் 2026

வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்ள...

https://electoralsearch.eci.gov.in இணைய முகவரி, Voter Helpline App அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்னை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

5:15 am, 22 ஏப்ரல் 2026

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 காவல்துறையினர்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 21,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.