தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுவை தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குச்சாவடி பற்றி அறிய!

நாளை புதுவை பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குச்சாவடி பற்றிய விவரங்கள்

News image

வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் - கோப்பிலிருந்து - DPS

Updated On :8 ஏப்ரல் 2026, 6:15 pm IST

நாட்டில் புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வழக்கம் போலவே காலை 7 மணிக்குத் தொடங்கி இடைநில்லாமல் மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும். நாளைய தேர்தலில் 30 தொகுதிகளில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

மதிய நேரத்தில் வெய்யில் கடுமையாக இருக்கும் என்பதால், பொதுவாக மக்கள் காலையிலேயே வாக்களிக்க அதிகம் வருவார்கள். எனவே, வரிசை அதிகமாக இருக்கும் என்பதால், வாக்குப்பதிவு தொடங்கியதுமே மக்கள் வாக்களிக்க வந்தால், நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வாக்களிக்கும் வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் பல வசதிகளை செய்துள்ளது. வாக்காளர் சேவை இணையதளம் அல்லது செயலிகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டையும், வாக்குச்சாவடி விவரக் குறிப்பும் கையில் எடுத்துக் கொள்வது குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வேறு ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.

நீங்கள் வாக்களிக்கவிருக்கும் வேட்பாளரின் பெயர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கே இருக்கிறது என்பதை, முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்வது நல்லது. அது பற்றி வாக்குச்சாவடியில் விவரமாக வெளியிடப்பட்டிருக்கும்.

வாக்களித்ததும் அருகில் உள்ள விவிபேடில் நீங்கள் வாக்களித்த கட்சியின் சின்னம் காட்டப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

புதுச்சேரியில் அனைவரும் வாக்களிக்க வசதியாக, அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படும்.

புதுவையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை நடத்தத் தேவையான அனைத்து பொருள்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகளுக்கு 78 பறக்கும் படைகள், 40 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 50 விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பணியில் 4116 அரசு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள 137 இடங்களில் 155 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை முதல் அந்தந்த வாக்கு மையங்களுக்கு பேருந்துகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.

Summary

Puducherry Election! Know about polling start time, polling booths!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.