வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் வலைதளத்தில் மிக எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலைப் போன்று, தமிழ்நாட்டிலும் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டை விநியோகித்து வருகிறது.
வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெறாதோர் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, https://electoralsearch.eci.gov.in இணைய முகவரியிலோ அல்லது வாக்காளர் உதவி எண் செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தியோ தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வாக்குச் சாவடிக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டையுடன் வாக்காளர் தகவல் சீட்டு கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள், பெயர் உள்ளிட்ட சுயவிவரங்கள் அல்லது செல்போன் எண்ணை பயன்படுத்தி வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1. வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலம் (கட்டாயமில்லை) ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. பெயர், உறவினர் பெயர், பாலினம், வயது / பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிட்டு, அந்த எண்ணுக்கு வரக் கூடிய ஓடிபியைப் பதிவிட்ட பிறகு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Summary
What should you do if you do not have a booth slip?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
தமிழகத்தில் வீடுதோறும் ‘பூத் சிலிப்’ விநியோகம் தீவிரம்

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


