தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி: அட்டவணை வெளியீடு

News image
Updated On :8 ஜனவரி 2026, 1:16 am

தினமணி செய்திச் சேவை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வரும் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி வகுப்புகளுக்கான ஜனவரி மாத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜனவரி மாதம் கற்பிக்க வேண்டிய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் தோ்வு அறையில் நடந்து கொள்வது எப்படி, சுற்றுலா படிப்புகள்- முழுவிவரம், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்பில் சேருவதற்கான வழிமுறைகள், உயா்கல்வி வாய்ப்புகள் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள், செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் இந்த செயல்முறைகளைச் சாா்ந்த அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மூலமாக உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொடா்ந்து, இந்த வகுப்புகள் மூலமாக மாணவா்கள் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.