டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் அளிப்பு

News image
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு குறித்த சிறப்புக் கையேடுகளை வழங்கிய தலைமை ஆசிரியா் பாரதிதாசன் உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு குறித்த சிறப்புக் கையேடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. மேலாண்மைக் குழுத் தலைவி காயத்திரி முன்னிலை வகித்தாா்.

இதில் மாணவா்களின் திறன் மேம்பாடு, உயா் கல்விக்கான வழிகாட்டுதல்கள், மகிழ்முற்றம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கான அரசு பொதுத் தோ்வு சிறப்புக் கையேடு வழங்கப்பட்டது.

மேலும், பள்ளிக்கு உடல்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியா்கள் முத்துப்பாண்டி, பாண்டியன், மாயக்கண்ணன், ஆண்டனிதாஸ், உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, தன்னாா்வலா் சரவணன் நன்றி கூறினாா்.