தீர்ப்பு தீர்வல்லவே!
சென்னை மதுரவாயல் காவல்நிலையத்துக்கு நாள்தோறும் நான்கு பேருக்கு, மூன்று வேளை உணவு இலவசமாகத் தர மறுத்த ஓட்டல்காரர்கள் ஐந்து பேரை அடித்து உதைத்து, பொய் வழக்கு போட்ட காவல்துறையினர் இருவருக்கு (ஆய்வர் மற்றும் தலைமைக் காவலர்) 6 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது.









