அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்-பிரியா தம்பதியினரின் மகன் தவசுதன் (7). அங்குள்ள அம்பாள் மெட்ரிக் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், 100 சங்கத் தமிழ் இலக்கியத்தின் நூல் ஆசிரியர், சாலை இளந்திரையனின் நிற்க நேரமில்லை, மருதகாசியின் ஏர்முனைக்கு நேர், கலைஞர் கருணாநிதியின் புறநானூற்று தாய், முடியரசனின் யார் கவிஞர், வாணிதாசனின் யார் கவிஞர், வைரமுத்துவின் அறிவில் ஐந்து பெரியதா- ஆறு பெரியதா, பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும், அறிஞர் அண்ணாவின் மனிதன், தாராபாரதியின் திண்ணையை இடித்து தெருவாக்கு, கவிச்சுடர் கவிதைப் பித்தனின் தளபதி ஆனது எப்படி, பாரதிதாசனின் சாய்ந்த தராசு, ஔவையாரின் ஆத்திச்சூடி, திருமூலரின் திருமந்திரம், கீதாச்சாரம், 50 தேசத் தலைவர்களின் பெயர், வரலாறு, தமிழக அமைச்சர்களின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் கூறுகிறார்.