வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?
வரலாற்றுப் பெருமிதம் கொண்ட இளைஞர்கள் எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்களோ, நிகழ்காலம் குறித்துக் கவலை கொள்ளும் இளைஞர்கள் எந்த தேசத்தில் அதிகமாக உள்ளனரோ, எதிர்காலம் பற்றிய கனவுகளை நெஞ்சில் தேக்கிக் களமிறங்குகிற இளைஞர்கள் எந்த மண்ணில் அதிகமாக வாழ்கின்றனரோ அந்த நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது' என்று மகான் அரவிந்தர் கூறியிருக்கிறார்.










