சி.ஐ.ஏ. அமைப்பானது அமெரிக்காவின் வெளிவிவகாரத் தகவல் சேகரிக்கும் அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து வரும் எதிர்ப்புகள் உலகநாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், குழுமநலங்கள், தூதரகங்கள் இவற்றின் பாதுகாப்பிற்கு அதிகக் கவனம் செலுத்தியது. உள்நாட்டிலிருந்து பாதுகாப்பிற்கு பாதிப்பு வராது என்ற தைரியம், நம்பிக்கை. ஆனால் 9/11 நியூயார்க் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு எவ்வாறு ஊடுருவப்பட்டது என்பதை அமெரிக்கப் பாதுகாப்பு உயர்நிலைக் குழு ஆராய்ந்தது. பல்முனைகளிலிருந்து வரும் தகவல்கள் ஒருங்கிணைந்து ஆராயப்படுவதில்லை என்பது முக்கிய குறை. ராணுவம், வெளி விவகாரம், உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை போன்ற அமைப்புகளின் உளவுப் பிரிவுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டன. முழுமையான நிலவரம் புலப்படுவதில் தாமதம் என்பது பிரதான குறைபாடு. அதன் பிறகுதான் அதிபர் புஷ் நிர்வாகம், "தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியது.