பல பேரிடர்களை, "விதியே' என்று சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தாங்கிவிட்டு, 1999-இல்தான் பேரிடர்களைச் சமாளிப்பதற்கும், வழிமுறைகளை அறிவதற்கும் 31 அங்கத்தினர்கள் கொண்ட குழு, ஓய்வுபெற்ற உயர் அரசு அதிகாரி ஜே.சி. பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. பந்த் கமிட்டி, பேரிடர்களை ஐந்து வகையாகப் பிரித்து ஆராய்ந்து அவை முறையே 1) நீர் நிலை, வானிலை மாற்றங்கள், 2) புவியியல், பூமி, மலைகளின் கீழ்மட்டப் பாறை அடுக்குகளின் அசைவுகள், 3) ரசாயன, அணுமின் நிலையங்கள், பிற தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், 5) ஏனைய விபத்துகள் 6) உயிரியல் பேரிடர்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறது.