தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இதுவா உண்ணாவிரதம்?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும்நாள் வரை அஹிம்சை வழியி

Updated On :20 செப்டம்பர் 2012, 3:48 pm

சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும்நாள் வரை அஹிம்சை வழியில் தன் உடலை வருத்தி, உண்ணாநோன்பு இருந்து பலமுறை வெற்றி கண்டுள்ளார்.

  அவரின் சக்திமிக்க அறப்போராட்டமாம் உண்ணாவிரதப் போராட்டத்தை, நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிற சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் இப்போது கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

  அந்தவகையில், அண்மையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜேக் சார்பில், ஒருநபர் குழுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தர ஊதியத்தை வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர்.

 அதில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நடந்த ஆசிரியர்களின் உண்ணாவிரதம் கேலிக்கூத்தின் உச்சவடிவமாக இருந்தது.

பொதுவாக உண்ணாவிரதம்  என்பது, காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை உண்ணாநோன்பிருந்து போராடுவது வழக்கம். ஆனால், இங்கு நடந்த உண்ணாவிரதம் தொடங்கியதே காலை 11 மணிக்குத்தான். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போராட்டப் பந்தலில் இருந்து ஆசிரியர்கள், கும்பல் கும்பலாக வெளியேறி, அருகில் இருந்த கடைகளில் தேநீர் குடிக்கத் தொடங்கினர்.

 உண்ணாவிரதத்தில் இருந்த தலைவர்கள் போராட்டப் பந்தலுக்குள் வந்து அமருமாறு  பலமுறை ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அதை ஆசிரியர்கள் பொருள்படுத்தவே இல்லை.   பகல் ஒரு மணி அளவில் போராட்டப் பந்தலுக்குள் இருந்த பெண் ஆசிரியர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புறப்பட்டுச் சென்று விட்டனர். அதேநேரம் அப்போதுதான் உண்ணாவிரதம் தொடங்குவதுபோல, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் வேன் போன்ற வாகனங்களில் வந்து இறங்கிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

 தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆசிரியர்கள் பந்தலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அரசியல்வாதிகளைவிட ஆசிரியர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்களே எனப் பேசிக்கொண்டனர்.

 மேலும், எந்த ஓர் அரசியல் மேடையானாலும் ஏதாவது ஒருவகையில் போலீஸôரைத்  தரக்குறைவாகப் பேசுவது வழக்கம். ஆலங்குளம் காவல்நிலையம் அருகில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாநிலப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவர், போலீஸôரை ஒருமையில் பேசினார். இதைக் கண்டு அங்கிருந்த போலீஸôர், சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிவர்களே இவ்வாறு பேசுகின்றனரே என மனம் வெதும்பினர்.

 ஆசிரியர்கள் தங்களது ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்குத்  தெரிவிக்க விரும்புவது அவர்களது உரிமை. ஆனால், அரசியல்வாதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களில் எந்தவித நடைமுறையும் எப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லையோ, அதேபோல ஆசிரியர்கள் நடத்திய இந்தப் போராட்டத்திலும் அவர்கள் நடந்து கொண்டவிதம் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 அறவழியில் தேசப்பிதா காந்திஜி கையாண்ட சக்திவாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கி, கொச்சைப்படுத்தியது நியாயமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.