சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சர்ச்சை கருத்துக்கு வெளியேற்றம்; கொலை மிரட்டலுக்கு எச்சரிக்கையா? பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

DIN

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.

முதலில், சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், அவரை சமையலறை பக்கம் வரவேண்டாம் என்றும் நிக்சன் கூறினார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்கில் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும், நிக்சனும் மாறிமாறி கருத்துகளை தெரிவித்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.

இதற்கிடையே, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வினுஷா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரை நிக்‌ஷன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அர்ச்சனா உள்ளிட்ட சக போட்டியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ‘சொருகிருவேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்றைய வார இறுதி நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிக்சன் வெளியேற்றப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அர்ச்சனா ‘உரிமைக் குரல்’ தூக்கியும் எச்சரிக்கைக்கான மஞ்சள் கார்டு மட்டுமே கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி வீட்டுக்கு வந்து 4 வாரத்திற்கு பிறகு வினுஷா விஷயத்தை உங்களின் விளையாட்டுக்காக பேசினீர்களா என்றும், வினுஷா வீட்டில் இல்லாத போது இதை ஏன் பேச வேண்டும் போன்ற கேள்விகளையும் அர்ச்சனாவை நோக்கி கமல் முன்வைத்தார்.

முன்னதாக, இந்த சீசனில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பேசுவதாக சக பெண் போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், சர்ச்சை கருத்துக்கே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும்போது கொலை மிரட்டலுக்கு ஏன் மன்னித்து மற்றொரு வாய்ப்பு தருகிறீர்கள் என்று கமலை நோக்கி ரசிகர்கள் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேலும், வினுஷா வீட்டில் இல்லாதபோது அவரது பிரச்னையை பேசக் கூடாது என்றால், அவர் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு நடந்த டாஸ்க்கில் நிக்‌ஷன் கூறிய ‘உருவக்கேலி’ கருத்தை ஏன் ஒளிபரப்பு செய்தீர்கள் என்ற கேள்வியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதேபோல், பிக் பாஸைவிட்டு வெளியேறிய பிறகு நிக்சனின் கருத்துகளை பார்த்த வினுஷா, அவருக்கு கமல் நியாயம் கேட்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பிரச்னையை கமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது அர்ச்சனாவை குறை சொல்வதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.  

பிரதீப் ஆண்டனி விஷயத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்த போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் வினுஷாவுக்கு ஆதரவாகவும், அர்ச்சனா மீதான கொலை மிரட்டலுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில், பெண்களை உருவக்கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கான தண்டனை எச்சரிக்கை மட்டும்தானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.