தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணமா?

நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர் நடிகர் பிரேம்ஜி.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2019, 10:45 am

நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர் நடிகர் பிரேம்ஜி. சென்னை 28 மங்காத்தா, கோவா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் மட்டுமன்றி இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருப்பார். அவருக்கென தனி ரசிகர் வட்டாரம் உண்டு. 

அண்மையில் பிரேம்ஜி தனது ட்விட்டரில் வித்யாசமான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கேம் ஓவர் என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு டீ ஷர்ட் - அதை அணிந்திருக்கும் பிரேம்ஜி குனிந்து கொண்டிருப்பார். இது அவரது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பா அல்லது சொந்த வாழ்க்கையின் நிகழ்வா என்று தெரியாமல் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இதுவரை சிங்கிளாக இருந்துவிட்டேன், இனி கேம் ஓவர் என்பது போன்ற பொருள் கொண்ட அந்த டீ ஷர்ட் வாசகம் நெட்டிசன்களை குழப்பி வருகிறது. வழக்கம் போல குறும்புடன் சும்மாதான் அந்த பதிவைப் போட்டேன் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அது எதுவாக இருந்தாலும் சரி பிரேம்ஜியின் இந்த வித்யாசமான அறிவிப்பு சமூக வலைத்தலங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.