இதுதவிர மேலும் ஹைலைட்டான ஒரு விஷயம் என்னவென்றால்?! சிரஞ்சீவியின் மருமகளும் ஆந்திரப் பிரதேச அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகியுமான உபாசனா கொனிடேலா தனது மருத்துவமனை ஊழியர்களுக்காக அஞ்ஞாதவாசிக்கான சுமார் 500 டிக்கெட்டுகளை நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள், முதல் ஷோ பார்க்க அட்வான்ஸ் புக்கிங் செய்து கொடுத்துள்ளாராம். மொத்த புக்கிங்கும் ஊழியர்களுக்காக மட்டுமே தான். அவரது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அல்ல என்ற காரணத்தால் ‘அடடா... தன் ஊழியர்களுக்காக முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் புக் செய்து தரும் அளவுக்கு எப்படிப்பட்ட ஒரு அருமையான நிர்வாகி இவர்?!’ என்று அவரது அப்பல்லோ ஊழியர்களெல்லாம் தற்போது பேசிப்பேசி மாய்ந்து போகிறார்களாம்.