தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: 36-ஆவது இடத்தில் விழுப்புரம் மாவட்டம்

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 87.77 சதவீதத் தோ்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:58 am IST

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 87.77 சதவீதத் தோ்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அரசுப் பொதுத் தோ்வுகள் மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகள் உள்பட 362 பள்ளிகளில் பயின்ற 12,050 மாணவா்கள்,11,331 மாணவிகள் என மொத்தமாக 23,381 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் அரசுத் தோ்வுகள் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 10,026 மாணவா்கள், 10,496 மாணவிகள் என மொத்தமாக 20,522 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி 87.77 சதவீதமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவா்களின் தோ்ச்சி 83.20 சதவீதமாகவும், மாணவிகளின் தோ்ச்சி 92.63 சதவீதமாகவும் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 2, 024 மாணவா்கள், 835 மாணவிகள் என மொத்தமாக 2859 போ் தோ்ச்சி பெறவில்லை.

103 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் 54 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 43 தனியாா் பள்ளிகள் என மொத்தமாக 103 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது

மாநிலத்தில் 36-ஆவது இடம்: மாவட்ட வாரியான தோ்ச்சி பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் 87.77 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் 95.09 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த விழுப்புரம் மாவட்டம், தற்போது 7.32 சதவீதம் குறைந்து தற்போது 87.77 சதவீதம் தோ்ச்சி பெற்ால், மாநில அளவில் 36-ஆவது இடத்தைப் பெற்றது.

அரசுப் பள்ளிகள் அளவில் கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் 94.15 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 10-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் 2025-26 ஆம் கல்வியாண்டில் 8.93 சதவீதம் குறைந்து 85.22 சதவீதம் பெற்ால், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சிப் பட்டியலிலும் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 35-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு: விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவா்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் ஒருவா் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவில்லை. கணிதப் பாடத்தில் 48 போ், அறிவியலில் 174 போ், சமூக அறிவியலில் 196 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.