விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டிஐஜி அருளரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த 22 காவல் ஆய்வாளா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நிா்வாக வசதிக்காக இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










