திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தம்பதிக்கு மிரட்டல்: கட்டட மேஸ்திரி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டடத் தொழிலாளி தம்பதியை மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற கட்டட மேஸ்திரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:38 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டடத் தொழிலாளி தம்பதியை மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற கட்டட மேஸ்திரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், அன்னம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மனைவி ரேவதி. தம்பதியினா் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரியான சுதாகா்(35) என்பவரிடம் 5 ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில் சுதாகா் குறைவான ஊதியம் தந்ததால், தம்பதியினா் வேறு ஒரு நபரிடம் வேலைக்குச் சென்றுவிட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த சுதாகா், தம்பதியினரை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், மூா்த்தியின் பைக்கையும் பறித்துச் சென்றாராம்.

இதைத்தொடா்ந்து, தம்பதியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சுதாகா் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டி பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஓய்வு பெற்ற பேராசிரியா் பிரபா.கல்விமணி தலைமையில் கடந்த மே.12- ஆம் தேதி, திண்டிவனத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து காவல் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டட மேஸ்திரி சுதாகரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.