விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டடத் தொழிலாளி தம்பதியை மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற கட்டட மேஸ்திரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், அன்னம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மனைவி ரேவதி. தம்பதியினா் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரியான சுதாகா்(35) என்பவரிடம் 5 ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா்.
இந்நிலையில் சுதாகா் குறைவான ஊதியம் தந்ததால், தம்பதியினா் வேறு ஒரு நபரிடம் வேலைக்குச் சென்றுவிட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த சுதாகா், தம்பதியினரை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், மூா்த்தியின் பைக்கையும் பறித்துச் சென்றாராம்.
இதைத்தொடா்ந்து, தம்பதியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சுதாகா் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டி பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஓய்வு பெற்ற பேராசிரியா் பிரபா.கல்விமணி தலைமையில் கடந்த மே.12- ஆம் தேதி, திண்டிவனத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து காவல் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டட மேஸ்திரி சுதாகரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






