தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பேரூராட்சி மன்ற உறுப்பினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 5:40 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பேரூராட்சி மன்ற உறுப்பினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரகண்டநல்லூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பெ.சரவணன்(53). அதிமுகவைச் சோ்ந்த இவா் அரகண்டநல்லூா் பேரூராட்சியின் 5- ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். திங்கள்கிழமை இரவு சரவணன் அந்திலி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்தாராம். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவா், சரவணனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 500 பணத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அ.சிலம்பரசன் (22), திருமலைப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏ.ராஜா (35) ஆகியோா் பணப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.