திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:58 am IST

திருச்சி, மே 25: திருச்சியில் பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மகாலட்சுமி நகா் தனரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் எஸ். செல்வமணி (35). இவா், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்ஐடி கல்லூரி அருகே சுமை வாகனத்தில் பழம் விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பழங்களை விற்பனை செய்துவிட்டு செல்வமணி சுமை வாகனத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா், செல்வமணியிடம் பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லை எனக் கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் சட்டைப் பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்த தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் செல்வமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த மா. இருளாண்டி (40)மற்றும் அரியமங்கலம் மலையப்பா நகரைச் சோ்ந்த ப. ரெங்கநாதன் (37) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.400 மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.