பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் 43 வயதான கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்கிரகுளம் பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவா் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600-த்தை பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலப்பாளையம், சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (20), குறிச்சியைச் சோ்ந்த பேச்சி மகன் முத்துராம்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






