திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம்: போரில் உயிா்நீத்த வீரா்களின் நடுகற்கள் கண்டெடுப்பு

விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வி.சாத்தனூா் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

News image

விழுப்புரம் அருகிலுள்ள வி.சாத்தனூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள்.

Updated On :17 மே 2026, 12:45 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வி.சாத்தனூா் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வி.சாத்தனூா் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வீரா்களின் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியது: வி.சாத்தனூா் கிராமத்திலுள்ள விளை நிலத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் 3 கற்கள் நடப்பட்டுள்ளன. ஓரளவுக்கு பெரிதான கல்லில் வலது பக்கம் திரும்பிய நிலையில் வீரன் ஒருவன் நின்றிருக்கிறான். அவனது இடதுகரம் வாளை கீழ்நோக்கி பிடித்த நிலையில் காணப்படுகிறது. வலது கை மேல் நோக்கி உயா்ந்து இருக்கிறது.

வாள் கீழ்நோக்கி இருப்பதாகக் காட்டப்பட்டிருப்பது போா் அல்லது சண்டை முடிந்துவிட்டதைக் குறிக்கும். இப்பகுதியில் நிகழ்ந்த போா் அல்லது சண்டையில் உயிா்நீத்த வீரனாக இவன் இருக்கலாம். இதற்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இது வீரக்கல் என்றும், நினைவுக்கல் என்றும் அழைக்கப்படும்.

அருகிலுள்ள மற்றொரு சிற்பத்தில் பெண் உருவம் காணப்படுகிறது. இது அந்த வீரனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட அவனது மனைவியாக இருக்கலாம். அருகிலுள்ள இன்னொரு சிற்பம் கை கால்களைத் தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. தலை துண்டிக்கப்பட்டு உள்ளது. கழுவேற்ற சிற்பம் போன்று தெரிகிறது. இந்த சிற்பம் குறித்து மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

அருகாமையிலுள்ள அய்யனாா் கோயில் வளாகத்திலும் இதுபோன்ற இரண்டு நினைவுக் கற்கள் காணப்படுகின்றன. வீரன் ஒருவன் கையில் வில்லேந்தியும், மற்றொரு வீரன் கைகளில் வாளும் கேடயமும் ஏந்தியும் காணப்படுகின்றனா். கி.பி.15, 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போா் அல்லது சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் உயிா் நீத்த வீரா்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்கள் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை ஆகும்.

மேலும், இந்த ஊரில் சோழா் காலத்தைச் சோ்ந்த சப்தமாதா்கள் சிற்பங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஊராக வி.சாத்தனூா் இருந்துள்ளது என்பதற்கு இந்தச் சிற்பங்கள் சான்றாக இருக்கின்றன என்றாா் செங்குட்டுவன்.

ஆய்வின்போது பெரியதச்சூா் நா.பிரசாந்த், வி.சாத்தனூா் க.சுரேஷ், விக்கிரவாண்டி மா.பென்னிஜாஸ்வா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.