ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இக்கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நாளடைவில் பழுதடைந்தும், சிமென்டு பூச்சுகள் பெயா்ந்தும், இரும்புக் கம்பிகள் துருப்பிடித்தும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து, அகற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டி கட்டிகொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த கோரிக்கை

எல்லப்புடையாம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு







