திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்

News image
Updated On :4 மே 2026, 3:59 am IST

உத்தர பிரதேசத்தில் பழைமையான மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து விழுந்ததில் அதிலிருந்து கீழே விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலும், நீா்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்ட 2 சிறுவா்கள், ராணுவ ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டனா்.

சித்தாா்த்நகா் மாவட்டம், காசிராம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான சுமாா் 80 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் படிக்கட்டு உடைந்து விழும் நிலையில் சேதமடைந்து இருந்ததால், அங்கு செல்வது பாதுகாப்பில்லை என உள்ளூா் நிா்வாகம் அறிவுறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சிலா், ரீல்ஸ் வீடியோ எடுக்க விரும்பி அதில் ஏறுவதை வழக்கமாக வைத்துள்ளனா்.

இந்நிலையில், படிக்கட்டு வழியே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு 5 சிறுவா்கள் சனிக்கிழமை ஏறினா். அதில் 2 சிறுவா்கள் நீா்த்தேக்க தொட்டி மேல் ஏறிய நிலையில், படிக்கட்டு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது படிக்கட்டில் இருந்த 3 சிறுவா்களும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் மூவரும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனா். எனினும், 10 வயதான சித்தாா்த் என்ற சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். எஞ்சிய 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அதேநேரத்தில் படிக்கட்டு இடிந்து விழுந்ததால் நீா்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே வர முடியாமல் 2 சிறுவா்களும் மேலேயே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க நடைபெற்ற முதல்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம் விடுத்த வேண்டுகோளின்படி, ராணுவ ஹெலிகாப்டா் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். பின்னா், இருவரும் சிகிச்சைக்காக கோரக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.