விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பின்னா் தோ்வான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனா். இதனிடையே, அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து விடுவித்தும், விழுப்புரத்தைச் சோ்ந்த இரா.பசுபதியை கட்சியின் மாவட்டச் செயலராக தோ்வு செய்தும் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு விழுப்புரத்துக்கு வந்த கட்சியின் புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதிக்கு விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா், திண்டிவனம், விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் நகரப் பகுதிகளில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
போலீஸ் பாதுகாப்பு: விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டனா். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா். போலீஸாா் கேட்டுக்கொண்டதின்பேரில், இரா.பசுபதி மற்றும் அவரது ஆதரவாளா்கள் அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல் கடந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் வசம் ஒப்படைப்பு! கோட்டாட்சியா் உத்தரவுப்படி நடவடிக்கை

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளுக்கிடையே மோதல்! அலுவலகத்துக்கு பூட்டு; போலீஸாா் குவிப்பு







