திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

News image
Updated On :15 மே 2026, 5:50 am IST

விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பின்னா் தோ்வான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனா். இதனிடையே, அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து விடுவித்தும், விழுப்புரத்தைச் சோ்ந்த இரா.பசுபதியை கட்சியின் மாவட்டச் செயலராக தோ்வு செய்தும் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு விழுப்புரத்துக்கு வந்த கட்சியின் புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதிக்கு விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா், திண்டிவனம், விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் நகரப் பகுதிகளில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

போலீஸ் பாதுகாப்பு: விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை திரண்டனா். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணில் ஈடுபடுத்தப்பட்டனா். போலீஸாா் கேட்டுக்கொண்டதின்பேரில், இரா.பசுபதி மற்றும் அவரது ஆதரவாளா்கள் அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல் கடந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.