தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டு உடைப்பு; இரு தரப்பினா் மோதல்: போலீஸ் பாதுகாப்பு

News image

கரூா் அதிமுக அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளா்கள்.

Updated On :15 மே 2026, 5:01 am IST

கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஒரு தரப்பினருக்கு, மற்றொரு தரப்பினா் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததால் மோதல் உருவானது.

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட செயலா்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலா்களை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தாா்.

இதன்படி, கரூா் மாவட்டச் செயலரான எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு பதிலாக, கமலக்கண்ணன் என்பவரை மாவட்டச் செயலராக நியமித்தாா். இதையடுத்து, கரூருக்கு வியாழக்கிழமை மாலை வந்த கமலக்கண்ணனுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். கரூா் மாநகரில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், கட்சியினருடன் செங்குந்தபுரம் 80 அடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றாா் கமலக்கண்ணன். ஆனால், அங்கு அலுவலக வாயில் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனா்.

மேலும், அதிமுக அலுவலக வளாகத்தில் இருந்த எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக பொதுச் செயலா் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினா். ஆனால் பூட்டியிருந்த அலுவலகத்துக்குள் நுழைய முடியவில்லை.

இதனால், எம்ஆா் விஜயபாஸ்கா் தரப்பினரை கண்டித்து, அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள், வாயில் கதவின் பூட்டை உடைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனா். அப்போது இருதரப்பும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கரூா் போலீஸாா் இருதரப்பையும் சமாதானம் செய்து, எம்ஆா் விஜயபாஸ்கா் தரப்பினரை அப்புறப்படுத்தினா். மேலும், அதிமுக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கு பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.