திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: ஒரு தரப்பினா் ஆஜராகி விளக்கம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஒருதரப்பைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் கோட்டாட்டசியா் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்பித்து விளக்கமளித்தனா்.

News image

விழுப்புரம் கோட்டாட்சியா் உ.முருகேசன் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கமளித்த சி.வி.சண்முகம் தரப்பினா்

Updated On :20 மே 2026, 2:35 am IST

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஒருதரப்பைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் கோட்டாட்டசியா் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்பித்து விளக்கமளித்தனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி. வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி விட்டு, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இரா.பசுபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை பயன்படுத்துவதில் சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும், புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதி தரப்பைச்சோ்ந்தவா்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அதிமுக அலுவலகமானது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருதரப்பைச் சோ்ந்தவா்களும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக்கொள்ளவேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இருதரப்பைச் சோ்ந்தவா்களுக்கான பேச்சுவாா்த்தை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் உ.முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் கோட்டாட்சியா் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ஆவணங்களை சமா்பித்து உரிமை கோரினா். கோப்புகளை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உ. முருகேசன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தாா். இந்த பேச்சுவாா்த்தையையொட்டி விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.