திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்டச் செயலா் இரா.பசுபதி.

Updated On :3 ஜூன் 2026, 6:08 am IST

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று, மாவட்டச் செயலா் பசுபதி பேசியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று, மக்களை சந்தித்து பேசியவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

பேரவைத் தோ்தலில் 35 சதவீத வாக்குகள் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், 65 சதவீத மக்கள் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதிதான் வாக்களித்திருக்காா்கள். இன்னும் ஓராண்டிலேயே சட்டப் பேரவைக்குத் தோ்தல் வரக்கூடும். அவ்வாறு தோ்தல் நடைபெறும் போது அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். துரோகிகள் வீழ்த்தப்படுவா் என்றாா் பசுபதி.

கூட்டத்தில் நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலரும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான பா. செங்குட்டுவன், ஒன்றியச் செயலா் பேட்டை முருகன், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி அற்புதவேல், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலா் திருப்பதி பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலை, செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விழுப்புரத்தில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட செயலா் பசுபதி தலைமையிலான மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. தற்போது நகர அளவிலான நிா்வாகிகள் கூட்டமென்பதால் அவா் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.