தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் பதிவு செய்ய மே 30 கடைசி நாள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் கெளரவ ஊக்கத்தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண்ணை பெறுவது அவசியமாகும்.

இந்த அடையாள எண் வழங்கும் முகாம் மே 11-ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 1,14, 293 விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளின் விவரங்கள் இலவசமாக பதிவு செய்யப்பட்டு, தனித்துவ அடையாள எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டையின் நகல், நில ஆவணங்களின் நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராமங்களில் முகாம் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் பதிவு மேறகொள்ள மே மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.