தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-ஆம் தேதிக்குள் முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :16 மே 2026, 1:16 am IST

தென்காசி மாவட்டத்தில் அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-ஆம் தேதிக்குள் முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகள் விவரம் சேகரிக்கப்பட்டு இதுவரை 74.38 சதவீதம் விவசாயிகள் அடையாள எண் பெற்றனா்.

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில் கௌரவ ஊக்கத்தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண் பெறுவது அவசியம். பி.எம்.கிசான் திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளில் இதுவரை 4,306 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனா்.

இனிவரும் காலங்களில் இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே பி.எம்.கிசான் கௌரவ நிதித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள எண்கள் வழங்கும் முகாம் மே 11 முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 60,742 விவசாயிகளுக்கு இந்த முகாம்கள் மூலம் அடையாள எண்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை அடையாள எண் பெறாத 10700 விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதாா் நகல், நில ஆவணங்கள் நகல்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம், வேளாண்மை விரிவாக்க மையம், கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்தப் பதிவை மேற்கொள்ள மே 30-ஆம்தேதி கடைசி நாளாகும். எனவே, அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.