விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாள் திருவிழாவில்ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குபத்மினி தேவி மூா்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனா். பின்னா் மூலவா் ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் மாகா தீபாரதனையும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி,தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத் தலைவா் கிருஷ்ணன் ரெட்டியாா்,மற்றும் அனைத்து உபயதாா்கள் கிராம பொதுமக்கள் ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
முக்கிய தோ் திருவிழா வரும் 10-ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



