சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கொடியேற்றத்திற்கு பின்பு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:31 pm

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனையும், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. இரவில் அன்னவாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தாா்.

5ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு வெள்ளித் தோளுக்கினியானில் ரத்னங்கி சேவையும், இரவு 10 மணிக்கு வரதராஜ பெருமாள் கருடசேவையிலும் காட்சியளிக்கிறாா்.

திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.

மே 8 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

மே 9 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாமிரவருணியில் தீா்த்தவாரியும், 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு கந்தப்பொடி உத்ஸவத்தையொட்டி பெருமாள் வெள்ளி தோளுக்கினியானிலும் வீதியுலாவும் நடைபெற உள்ளன.