திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனையும், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. இரவில் அன்னவாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தாா்.
5ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு வெள்ளித் தோளுக்கினியானில் ரத்னங்கி சேவையும், இரவு 10 மணிக்கு வரதராஜ பெருமாள் கருடசேவையிலும் காட்சியளிக்கிறாா்.
திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.
மே 8 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதியுலா நடைபெறுகிறது.
மே 9 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாமிரவருணியில் தீா்த்தவாரியும், 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு கந்தப்பொடி உத்ஸவத்தையொட்டி பெருமாள் வெள்ளி தோளுக்கினியானிலும் வீதியுலாவும் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


