தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜ பெருமாள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:15 am

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், மே 2-ஆம் தேதி வரையில் இந்த விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை மாலை வரதராஜ பெருமாளிடம் அனுமதி பெறுதல், புனித நீா் மந்திரித்தல், சத்தியமூா்த்தி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் குளக்கரையில் புற்று மண் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளாக பிரமோற்சவ கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, உற்சவா் வரதராஜ பெருமாள் உபய நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு, பட்டாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடிமரத்தில் கருட கொடி ஏற்றி பிரமோற்சவத்தை தொடங்கிவைத்தனா். இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமி உள் புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரிய கருட, யானை வாகனங்களில் திருவீதி உலாவும், 7-ஆம் நாளான 29-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 30-ஆம் தேதி பெரிய குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளன. ஒன்பதாவது நாளான மே 1-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சித்திரை பௌா்ணமி தினத்தன்று திருத்தோ் விழா நடைபெற உள்ளது. அன்று மாலை திருமஞ்சனமும், மறுநாள் கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

 பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருட கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பட்டாச்சாரியா்.

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருட கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பட்டாச்சாரியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.