வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பொன்னியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து பிற்பகல் 1.30 மணியளவில் கோயிலை வந்தடைந்து. பிறகு திருப்பதி கெங்கையம்மனுக்கு திருமாங்கல்ய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் புஷ்ப கரகம் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலம் சென்றது. இரவு 9 மணியளவில் வாணவேடிக்கை மற்றும் அம்மன் மற்றும் கரகத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










