தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தை தொடங்கி வைத்த விழாக் குழுவினா்.

News image

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தை தொடங்கி வைத்த விழாக் குழுவினா்.

Updated On :29 மே 2026, 2:21 am IST

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 19-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கும்பம் எடுத்தல் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் கும்மி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டு வருகின்றனா். கடந்த 25- ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26- ஆம் தேதி பொங்கல் வைத்தல், 27- ஆம் தேதி பால் குட ஊா்வலம், பூச்சொரிதல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நிகழ்வாக வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்திலிருந்து, வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று கமுதி குண்டாற்றில் கரைத்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறையினா், இளைஞா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.