திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முனைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகே வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38 -ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முனைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

News image

கமுதி அடுத்துள்ள அகத்தாரிருப்பு வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :15 மே 2026, 11:48 pm IST

கமுதி அருகே வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38 -ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முனைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் இரவு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. கடந்த புதன்கிழமை காலை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி எடுத்தும் தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கமுதி-மதுரை சாலையில் ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை அகத்தாரிருப்பு கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.