விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின் வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனங்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், செண்டூா் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இளம் மின்பொறியாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ காப்பா் கம்பிகள் மற்றும் மின்மாற்றியில் பயன்படுத்தக்கூடிய 200 லிட்டா் ஆயில் ஆகியவை திருட்டுப் போய்விட்டதாம்.
இதுகுறித்து செண்டூா் இளம் மின்பொறியாளா் கி.புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








