விழுப்புரம் அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், வளவனூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி சரண்யா. தம்பதியரின் மகன் வைஷாந்த் (11). இவா் மடுகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த வைஷாந்த், வீட்டின் ஒரு பகுதியில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடினாா்.
அப்போது புடவை கழுத்தில் சுற்றியதில் வைஷாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் தம்பதியினா் சிறுவனை மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வைஷாந்த் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


