தேனியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அரண்மனைப் புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (68). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், 4 வயதுள்ள பேரனை திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றாராம்.
அப்போது, தேனி - மதுரை பங்களா மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


